WELCOME TO NEWS THAGAVAL

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2021



2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு - செல்போன் செயலி பயன்படுத்தப்படும். இப்பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும்.2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல்திட்டம் மற்றும் வினா பட்டியல் குறித்து தரவு உபயோகிப்பாளர் மாநாட்டில் ஆலோசனை


இந்தியாவில் 140 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் முதன்முறையாக, புள்ளி விவரங்கள் அனைத்தும் செல்போன் செயலி மூலமாக பெறப்படவுள்ளதென இந்திய மக்கள் தொகை பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல் திட்டம் மற்றும் வினாப்பட்டியலை இறுதி செய்வதற்காக, புதுதில்லியில் இன்று நடைபெற்ற தரவு உபயோகிப்பாளர் மாநாட்டில் பேசிய அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளர்கள், அவரவர் சொந்த செல்போனை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கணக்கெடுப்பாளர்கள் காகித அட்டவணைகள் மூலமாக புள்ளி விவரங்களைப் பெற்று அதனை மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்க வகை செய்யப்படும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை செயலாளர் திரு. ராஜீவ் கவ்பா, கணக்கெடுப்புப் பணியில் 33 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பிரதேசங்களிலும் 2020 அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு கணக்கெடுப்புப்பணி தொடங்கும் என்றும் நாட்டின் பிற பகுதிகளில் 2021 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு இந்தப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மனித தலைகளை கணக்கெடுப்பது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட திரு. ராஜீவ் கவ்பா, கொள்கை வகுத்தல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான சமூகப் பொருளாதார புள்ளி விவரங்களை திரட்டுவதாகவும் இருக்கும் என்றார்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இவை தவிர, தொகுதி மறுவரையறை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு போன்ற அரசியல் சாசன தேவைகளுக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என திரு. ராஜீவ் கவ்பா தெரிவித்தார்.
மாநாட்டில் வரவேற்புரையாற்றிய  இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் திரு. விவேக் ஜோஷி, 2021 மக்களவை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்றார். முதற்கட்டமாக, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் மாநில அரசுகளால் தேர்வு செய்யப்படும் ஏதாவது இரண்டு மாதங்களில் வீடுகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2021 பிப்ரவரி 9 முதல் 28 தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2021 மார்ச் ஒன்றுமுதல் மார்ச் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் திரு. விவேக் ஜோஷி குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பிரதேசங்களிலும் 2020 செப்டம்பர் 11 முதல் 30ஆம் தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2020 அக்டோபர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *